இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 நவம்பர், 2011

ஈழம் பிறக்கிறது - - பாலமுரளிவர்மன்




ஈழம் பிறக்குது பார்!-தமிழ்
ஈழம் பிறக்குது பார்!
புலிக்கொடி பறக்குது பார்!-அங்கே
புலிக்கொடி பறக்குது பார்!


ஈழம் பிறக்குது பார்!-தமிழ்


ஈழம் பிறக்குது பார்!
புலிக்கொடி பறக்குது பார்!-அங்கே
புலிக்கொடி பறக்குது பார்!


அண்ணன் வருகின்றார்!-பொட்டு
அம்மானும் வருகின்றார்!
அண்ணன் வருகின்றார்!-பொட்டு
அம்மானும் வருகின்றார்!


கரும்புலிவீரர் கடற்படை தலைவர்
யாவரும் வருகின்றார்!-புலிகள்
யாவரும் வருகின்றார்!


கடவுளைக் கண்ட மகிழ்ச்சியில்
கண்கள் நிறைகின்றார்-தமிழர்
கண்கள் நிறைகின்றார்!
சுற்றம் சூழ சொந்தங்கள் வாழ
ஆட்சி புரிகின்றார்!அண்ணன்
ஆட்சி புரிகின்றார்!


பெண்கள் நடக்கின்றார்!நள்ளிரவில்
பெண்கள் நடக்கின்றார்!
அச்சம் சிறிதும் இல்லாமல்
ஆண்கள் துணைக்கு கொள்ளாமல்
பெண்கள் நடக்கின்றார்!நள்ளிரவில்
பெண்கள் நடக்கின்றார்!


பிள்ளைகள் படிக்கின்றார்!-தமிழில்
பிள்ளைகள் படிக்கின்றார்!
தன்னைக் காத்த தலைமகன் கண்டு
தமிழ்த்தாய் சிரிக்கின்றாள்!மகிழ்வாய்
தமிழ்த்தாய் சிரிக்கின்றாள்!


பசுமை நிறைகிறது!-மண்ணில்
பசுமை நிறைகிறது!
பசியும் பிணியும் தேசம்விட்டு
ஓடிமறைகிறது!எங்கோ
ஓடிமறைகிறது!
உலகம் வியக்கிறது!-இந்த
உலகம் வியக்கிறது!


ஒப்பிலாத் தலைவர் செயல்திறன் கண்டு
உலகம் வியக்கிறது!-உடனே
ஐ நா அழைக்கிறது!


அண்ணன் பேசுகிறார்!-நமது
அண்ணன் பேசுகிறார்!
அழகுசிரிப்பும் அன்பும் ததும்ப
அண்ணன் பேசுகிறார்!
ஐ நா சபையில் அண்ணன் பேசுகிறார்!


அண்ணன் நிகழ்த்தும்
மாவீரர்நாள் உரை கேட்ட
மாற்றுநாட்டு தலைவர்களும்
எழுந்து நிற்கின்றார்-சிலிர்ப்பாய்
எழுந்து நிற்கின்றார்!


இந்தியா வருகின்றார்-தலைவர்
இந்தியா வருகின்றார்!
அரசியல்
அறிவியல்
ஆட்சி
நிர்வாகம்
சட்டம்
சமத்துவம்
விவசாயம்
ராணுவம்
அனைத்துத் துறையிலும்
பயிற்சி தருகின்றார்!-தலைவர்
பயிற்சி தருகின்றார்!


உலகம் வியக்கிறது!-இந்த
உலகம் வியக்கிறது!
ஒப்பிலாத் தலைவர் செயல்திறன் கண்டு
உலகம் வியக்கிறது!


ஈழம் பிறக்குது பார்!-தமிழ்
ஈழம் பிறக்குது பார்!
புலிக்கொடி பறக்குது பார்!-ஐ நா சபையில்
புலிக்கொடி பறக்குது பார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக