இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 நவம்பர், 2011

யுத்தம் முடியவில்லை - பாலமுரளிவர்மன்





விடுதலைக் கனலை
விடுதலைக் கனலை
வேடிக்கை என்றே நினைத்தாயா?

பெறுதலை விடவும்
தருதலே பெருமை
தமிழா நெஞ்சில் விதைத்தாயா?

யுத்தம் முடியவில்லை!-இன்னும்
யுத்தம் முடியவில்லை!-எங்கள்
ரத்தம் கொதிக்கும் வரையில்
யுத்தம் முடிவதில்லை!

உறக்கம் எமக்கு இல்லை!-சிங்களா
உறக்கம் எமக்கு இல்லை!
ஈழம் பிறக்கும் வரையில்
உறக்கம் எமக்கு இல்லை!

பிறக்கும் எமது பிள்ளை!-புலியாய்
பிறக்கும் எமது பிள்ளை!
அறுக்கும் உந்தன் குடியை !
அங்கே பறக்கும் எங்கள் கொடியே!

நீர் இறைக்கவில்லை-மண்ணில்
பயிர் விதைக்கவில்லை!
ரத்தம் இறைத்து இறைத்து எங்கள்
உயிர் விதைத்திருக்கின்றோம்!

எழுவோம் மீண்டும் நாளை!-நாங்கள்
எழுவோம் மீண்டும் நாளை!
ஈழம் உதிக்கும் வேளை!-அதுவே
ஈழம் உதிக்கும் வேளை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக